படகு குழாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்
அரியாங்குப்பம், : தொடர் விடுமுறையால், நோணாங்குப்பம் படகு குழாமில், சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.புதுச்சேரிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், நோணாங்குப்பம் படகு குழாமில் படகு சவாரி செய்வர். பொங்கல் பண்டிகை உள்ளிட்ட 6 நாட்கள் தொடர் விடுமுறையால் சுற்றுலாப் பயணிகள் படகு குழாமில் குவிந்தனர். இதனால், சுற்றுலாத்துறைக்கு பல லட்சம் வருமானம் கிடைத்தது.