உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வ.உ.சி., பள்ளியில் முப்பெரும் விழா

வ.உ.சி., பள்ளியில் முப்பெரும் விழா

புதுச்சேரி: புதுச்சேரி வ.உ.சி., அரசு பள்ளியில், இலவச லேப்டாப் வழங்கும் விழா, பிளஸ் 2 மாணவர்களுக்கு கையேடு வழங்குதல் மற்றும் பெயர் பலகை திறப்பு ஆகிய முப்பெரும் விழா நடந்தது.பள்ளி முதல்வர் கரிமா தியாகி தலைமை தாங்கினார். பொறுப்பாசிரியர் பத்மாவதி வரவேற்றார். பள்ளி கல்வி இணை இயக்குநர் சிவகாமி முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக அமைச்சர் லட்சுமி நாராயணன் பங்கேற்று, மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கி பேசினார். முன்னாள் மாணவர்கள், நாகராஜன், பாலகுரு, காமாட்சி சுந்தரம் ஆகியோர் தங்களின் பெற்றோர்கள் நினைவாக அமைத்த பள்ளியின் பெயர் பலகையை அமைச்சர் திறந்து வைத்தார்.விரிவுரையாளர் கிரிஜா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முன்னாள் கவுன்சிலர் குமரன், ஆசிரியர் எட்வர்டு சார்லஸ் உட்பட பலர் பங்கேற்றனர். விரிவுரையாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி