உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அம்மனுார் - புத்துார் இடையே ரூ.2.62 கோடியில் சாலை பணி

அம்மனுார் - புத்துார் இடையே ரூ.2.62 கோடியில் சாலை பணி

செய்யூர்:செய்யூர் அருகே அம்மனுார் கிராமத்தில் இருந்து புத்துார் வழியாக செய்யூர் - சித்தாமூர் சாலையை இணைக்கும் 3.3 கிலோ மீட்டர் அளவிலான தார் சாலை உள்ளது.இச்சாலையை புத்துார், அம்மனுார், வெற்றிக்காடு, விராலுார் ஆகிய கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர். 15 ஆண்டுகளாக சாலை பழுதடைந்து இருந்ததால், பள்ளி, கல்லுாரி, வேலைக்கு செல்பவர்கள் மற்றும் விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனர். இந்த சாலையை சீரமைக்க, இப்பகுதி வாசிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், ஊரக வளர்ச்சித் துறை சார்பில், முதல்வர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 3.3 கி.மீ., சாலை சீரமைக்கும் பணி கடந்தாண்டு துவக்கப்பட்டது.மேலும், சாலையின் இடையே ஏழு சிறு பாலங்கள் அமைக்கும் பணி முடிந்த நிலையில், தற்போது தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ