உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பறிமுதல் வாகனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சாலை

பறிமுதல் வாகனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சாலை

மதுராந்தகம்:மதுராந்தகம் காவல் எல்லைக்குட்பட்ட கிராம சாலைகள், மாநில நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையில், விபத்தில் சிக்கி உருக்குலைந்த வாகனங்கள், போலீசாரால் பறிமுதல் செய்யப்படுகின்றன.இந்த வாகனங்கள் அனைத்தும், ஜி.எஸ்.டி., சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், காலை மற்றும் மாலை வேளைகளில், தனியார் பள்ளி, கல்லுாரி மற்றும் அரசு பேருந்துகள் மற்றும் கனரக வாகன ஓட்டிகள், இப்பகுதியை கடந்து செல்ல மிகவும் அவதி அடைகின்றனர்.எனவே, சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள விபத்து வாகனங்களை, அங்கிருந்து உடனே அப்புறப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ