உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கடலில் மூழ்கியவர் உடல் மீட்பு

கடலில் மூழ்கியவர் உடல் மீட்பு

சென்னை:சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, இந்திரா காந்தி நகரைச் சேர்ந்தவர் நித்தியானந்தம், 54. இவர், தன் நண்பர்களுடன், நேற்று முன்தினம் மாலை, திருச்சிணாங்குப்பம் கடலில் குளித்தார். அப்போது, ராட்சத அலையில் சிக்கி, நித்தியானந்தம் மாயமானார்.அதிர்ச்சியடைந்த நண்பர்கள், மீனவர்கள் உதவியுடன் தேடியும், அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று காலை நித்தியானந்தம் உடல், அதே பகுதியில் கரை ஒதுங்கியது.தகவலறிந்த திருவொற்றியூர் போலீசார், அந்த உடலைக் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை