உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பைக் மீது கார் மோதல் மதுராந்தகத்தில் ஒருவர் பலி

பைக் மீது கார் மோதல் மதுராந்தகத்தில் ஒருவர் பலி

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த மேலவலம்பேட்டை, துலுக்கானத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரசாந்த், 29.இவர், நேற்று பேஷன் ப்ரோ இருசக்கர வாகனத்தில், திருக்கழுக்குன்றம் -- மதுராந்தகம் மாநில நெடுஞ்சாலையில், மேலவலம்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.அப்போது, மதுராந்தகத்திலிருந்து திருக்கழுக்குன்றம் நோக்கி, எதிர் திசையில் சென்ற இன்னோவா கிரிஸ்டா காரை ஓட்டிச் சென்ற நபர், எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதினார்.இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற பிரசாந்த், சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து, மதுராந்தகம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பிரேதத்தை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக, மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின், வழக்கு பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய இன்னோவா கார் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை