| ADDED : மே 15, 2024 10:14 PM
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி, சீனிவாசபுரம் பகுதியில் வசித்து வந்தவர் கோவிந்தராஜ், 60. இவர், அப்பகுதியில் உள்ள தனியார் கார் சர்வீஸ் நிறுவனத்தில் பாதுகாவலராக பணிபுரிந்து வந்தார்.நேற்று காலையில், அவர் பணிபுரிந்து வந்த நிறுவனத்தின் அருகில் உள்ள காலி மைதானத்தில், தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.இது குறித்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு சென்ற கூடுவாஞ்சேரி போலீசார், கோவிந்தராஜ் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரித்தனர்.போலீசார் கூறியதாவது:தனியார் கார் சர்வீஸ் நிறுவனத்தில் பாதுகாவலராக வேலை செய்து வந்த கோவிந்தராஜ், அவரது வீட்டிற்கு 15 நாட்களுக்கு ஒரு முறை செல்வது வழக்கம்.இந்த மாதம் சம்பளம் வாங்கிவிட்டு, வீட்டுக்கு செல்லவில்லை. அதோடு, சில நாட்களாக வேலைக்கு செல்லாமலும் இருந்துள்ளார்.நேற்று, மது அருந்திவிட்டு, சாலையோரம் படுத்து கிடந்துள்ளார். இவர் இறந்து கிடந்த இடத்தில், வழக்கமாக இரவு நேரத்தில் திருநங்கைகள் தான் உலவுவர்.எனவே, கோவிந்தராஜ் மரணத்திற்கும், திருநங்கைகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என, விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.