உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூடுவாஞ்சேரியில் கார்கள் மோதல்; டிரைவர்கள் வாக்குவாதத்தால் நெரிசல்

கூடுவாஞ்சேரியில் கார்கள் மோதல்; டிரைவர்கள் வாக்குவாதத்தால் நெரிசல்

கூடுவாஞ்சேரி : கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையில், சென்னை தாம்பரத்தில் இருந்து, செங்கல்பட்டு நோக்கி டிராவல்ஸ் நிறுவன கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகே வந்த போது, முன்னே சென்ற பேருந்து மீது மோதாமல் தவிர்க்க, அதன் டிரைவர் திடீர் பிரேக் பிடித்து காரை நிறுத்தினார்.அப்போது, பின்னால் வந்த மற்றொரு கார், டிராவல்ஸ் கார் மீது மோதியது. இதில், டிரவால்ஸ் காரின் பின்பகுதி சேதமடைந்தது. அதனால், இரு கார்களின் டிரைவர்களுக்கும் இடையே, கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. டிராவல்ஸ் கார் டிரைவர் அளித்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு வந்த வாடகை கார் டிரைவர்கள், மோதிய கார் உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது.இது தொடர்பாக, அப்பகுதிவாசிகள் அளித்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு வந்த கூடுவாஞ்சேரி போலீசார், இரு தரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S. Neelakanta Pillai
ஜூன் 09, 2024 07:02

இவர்கள் வாக்குவாதத்தில் மக்களுக்கான போக்குவரத்து இடைஞ்சல் ஏற்படுத்திய காலம் எவ்வளவு? இவ்வளவு மக்கள் தொகை இருக்கும் நாட்டில் கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதங்களும் சண்டை சச்சரவுகள் ஏற்படுத்துவது இயற்கை. ஆனால் அரசுத்துறை நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டியது மேற்படி தகராறு காரணமாக பொதுமக்கள் போக்குவரத்து இடைஞ்சல் ஏற்படுத்தவே கூடாது. அதை உறுதி செய்யும் வகையில் இடைஞ்சல் ஏற்படுத்திய இரு சாரார் மீதும் வழக்கு பதிவு செய்து தனியாக தண்டனை சட்டம் அமல்படுத்த வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டம் அதுபோன்ற சட்டம் ஒழுங்கு பார்வை என்பது அறவே கிடையாது. காரணம் எல்லோரும் வேடிக்கை பார்ப்பவர்களாக இருப்பதால் நியாயமான நேர்மையான நிர்வாகத்தை வழங்குவதே பற்றி நிர்வாகமும் அதை உறுதி செய்கிறார்களா என்பதை கண்காணிக்கும் மக்களும் இந்த நாட்டில் இல்லாமல் போய்விட்டார்கள்.


மேலும் செய்திகள்