உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அனுமந்தபுரம் கோவில் குளத்தை சுத்தப்படுத்த பக்தர்கள் கோரிக்கை

அனுமந்தபுரம் கோவில் குளத்தை சுத்தப்படுத்த பக்தர்கள் கோரிக்கை

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தில், பிரசித்தி பெற்ற அகோர வீரபத்திரர் கோவில் உள்ளது. இந்த கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.இங்கு, மாதம்தோறும் அமாவாசை, பவுர்ணமி, மஹா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி ஆகிய தினங்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து, இரவில் தங்கி தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி செல்கின்றனர்.இந்த கோவிலின் வாயிலுக்கு எதிரே, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளம் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், இக்கோவிலில் குளித்து விட்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.குளத்தில் உள்ள தண்ணீரில் பிளாஸ்டிக் குப்பை, எலுமிச்சை பழ மாலைகள், அணிந்து வந்த உடைகள் உள்ளிட்டவற்றை பக்தர்கள் வீசி செல்கின்றனர்.குளத்தில் தண்ணீர் குறைவாக உள்ளதால், முழுதும் குப்பை படிந்து காணப்படுகிறது. மேலும், குளத்தை சுற்றி புற்கள் முளைத்துள்ளதால், அதில் பாசி படிந்து காணப்படுகிறது.இது குறித்து பக்தர்கள் கூறியதாவது:கோவிலுக்கு பரிகாரம் செய்ய வரும் பெரும்பாலான பக்தர்கள், தங்களின் உடைகளை குளத்தில் உள்ள தண்ணீரில் வீசி செல்கின்றனர்.இந்த குளத்தில், ஆண்டுதோறும் மஹாளய அமாவாசை தினத்தன்று, முன்னோர்களுக்கு தர்ப்பனம் கொடுப்பது வழக்கம்.அதே போல, கடந்த 23ம் தேதி சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சென்றனர். இதனால், குளத்தில் குப்பை நிறைந்து காணப்படுகிறது. எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, குளத்தின் நீரை சத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ