உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாராயம் விற்றவர் குண்டாசில் கைது

சாராயம் விற்றவர் குண்டாசில் கைது

செங்கல்பட்டு,:செங்கல்பட்டு அடுத்த காட்டாங்கொளத்துார் மாதாகோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் என்கிற பூச்சி ராஜேந்திரன், 50. இவர், திருக்கழுக்குன்றம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த மாமல்லபுரம் மதுவிலக்கு போலீசார், ராஜேந்திரன் வீட்டில் சோதனை செய்து, சாராயத்தை பறிமுதல் செய்து, அவரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து, ராஜேந்திரன் என்பவர் மீது, ஏற்கனவே இரண்டு வழக்குகள் நிலுவையில்உள்ளதால், குண்டர்சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு, எஸ்.பி., சாய் பிரணீத்பரிந்துரை செய்தனர். இதை தொடர்ந்து, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் அருண்ராஜ் நேற்று உத்தரவிட்டார். அதன்பின், புழல் சிறையில் உள்ள ராஜேந்திரனிடம், குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான நகலை போலீசார்வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி