உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வரைவு வழிகாட்டி பதிவேடு ஆட்சேபனை தெரிவிக்க வாய்ப்பு

வரைவு வழிகாட்டி பதிவேடு ஆட்சேபனை தெரிவிக்க வாய்ப்பு

செங்கல்பட்டு:வருவாய் கிராமங்கள் வாரியாக, வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மீது ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்காலம். இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:சந்தை வழிகாட்டி மதிப்பினை சீரமைத்தல் தொடர்பாக, இந்திய முத்திரைச்சட்டம் பிரிவு 47ஏ - ன் கீழான தமிழ்நாடு முத்திரைத்தாள் சட்டம் - 2010 விதிகளில், விதி 4 (2)ன்படி, மைய மதிப்பீடு குழு, கடந்த ஏப்., 26ம் தேதி, நிர்ணயம் செய்தது.செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக, வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது.அவை, பொதுமக்கள் பார்வையிடும் வகையில், வட்டாட்சியர், சார் - பதிவாளர் அலுவலகங்கள் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன.இதன் விபரங்கள் www.tnreginet.gov.inஎன்ற இணையதளத்தில், அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.இதன் மீது ஏதேனும் ஆட்சேபனைகள் மற்றும் கருத்துரைகள் இருப்பின், அதனை 15 நாட்களுக்குள், கலெக்டர் தலைமையிலான மதிப்பீட்டு துணைக்குழுவிடம் தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ