உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பஞ்., தலைவி மீது தாக்குதல் கடலுார் கிராமத்தில் பதற்றம்

பஞ்., தலைவி மீது தாக்குதல் கடலுார் கிராமத்தில் பதற்றம்

கூவத்துார்:செங்கல்பட்டு கூவத்துார் அடுத்த கடலுார் ஊராட்சி தலைவி ஆதிலட்சுமி, 42. இவரது கணவர் ஞானவேல், 52.கடலுார் எல்லையம்மன், வெங்கட்டம்மன் கோவிலில், கடந்த மே மாதம் நடந்த திருவிழாவில் இப்பகுதி மீனவ சபையினருக்கும், ஞானவேல் குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டது.இதற்கிடையே, ஊராட்சி நிர்வாகம் சார்பில் அப்துல் கலாம் குறுக்கு தெருவில் சாலை அமைக்க ஏற்பாடான நிலையில், 'தனியார் இட சிக்கல் உள்ளதாக கூறி, அங்கு சாலை அமைக்க வேண்டாம்' என, எதிர்ப்பு தெரிவித்து, ஒரு தரப்பினர் ஊராட்சி தலைவி ஆதிலட்சுமியை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.இது குறித்து கூவத்துார் போலீசில் அளித்த புகாரை, பின் ஆதிலட்சுமி திரும்ப பெற்றார். இந்த நிலையில், மீனவ சபையினரை மீறி, போலீசில் புகார் அளித்ததற்காக ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.மேலும், கடந்த 2ம் தேதி, ஆதிலட்சுமி மற்றும் ஞானவேலின் சகோதரர் சேகர் குடும்பத்தினரை, எதிர் தரப்பினர் தாக்கியுள்ளனர். இதில் ஐந்து பேர் காயமடைந்தனர்; இருவரின் வீடுகளும் சூறையாடப்பட்டன.இது தொடர்பாக, ஆதிலட்சுமி புகாரின்படி, மீனவ சபையினர் உள்ளிட்ட 22 பேர் மீது, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கடலுார் மீனவ கிராமத்தில் பதற்றத்தை தணிக்க, போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்