உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பருக்கல் முத்துமாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்

பருக்கல் முத்துமாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்

சித்தாமூர் : சித்தாமூர் அருகே பருக்கல் கிராமத்தில், முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலை புணரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்த கிராமத்தினர், கடந்த 2 ஆண்டுகளாக திருப்பணி மேற்கொண்டனர்.திருப்பணிகள் முடிந்ததை அடுத்து, கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள், 20ம் தேதி துவங்கின. தொடர்ந்து கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை நடந்தன.அதையடுத்து, நேற்று காலை 10:15 மணிக்கு, முத்துமாரியம்மன் கோவில் கோபுர விமானத்திற்கும், 10:20 மணிக்கு மூலவருக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.பின், முத்துமாரியம்மனுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்கரம் செய்யப்பட்டு, தீப ஆராதனை காட்டப்பட்டது.பருக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் வசிக்கும் ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து, சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி