உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ராகவேந்திரா சுவாமி பிருந்தாவனத்தில் முப்பெரும் விழா கோலாகலம்

ராகவேந்திரா சுவாமி பிருந்தாவனத்தில் முப்பெரும் விழா கோலாகலம்

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த கருங்குழியில், ராகவேந்திரா சுவாமிகளின் பிருந்தாவனம் உள்ளது.நேற்று, ராகவேந்திரரின் 353ம் ஆண்டு ஆராதனை விழா, கருங்குழி பிருந்தாவனத்தின், 30ம் ஆண்டு விழா மற்றும் தவ யோகி ரகோத்தமா சுவாமிகளின் 11-வது ஆண்டு யோக பிரவேச விழா என, முப்பெரும் விழா நடந்தது.இதனையொட்டி, காலை 6:00 மணிக்கு கோ பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி நரசிம்மர் ஹோமம், ஆஞ்சநேயர் ஹோமம், ராகவேந்திரா சுவாமியின் மூலமந்திர ஹோமம் ஆகியவை நடைபெற்றன.அதனைத் தொடர்ந்து, ஆன்மிக சொற்பொழிவுகளும், ஆன்மிக பக்தி இன்னிசை கச்சேரியும் நடந்தன. நண்பகல் 12:00 மணிக்கு, கருங்குழி பிருந்தாவனச் சித்தர் யோகி ரகோத்தமா, ராகவேந்திரா சுவாமிக்கு மஹா தீபாராதனை காண்பித்தார்.இந்த விழாவில், புதுச்சேரி சட்டசபை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், முன்னாள் போலீஸ் டி.ஜி.பி., பாலச்சந்திரன், திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கருங்குழி பிருந்தாவன் சித்தர் யோகி ரகோத்தமா அறக்கட்டளையின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி