உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கடத்தி செல்லப்பட்ட 57 மாடுகள் மீட்பு

கடத்தி செல்லப்பட்ட 57 மாடுகள் மீட்பு

அச்சிறுபாக்கம் : கேரளாவுக்கு கன்டெய்னர் லாரியில் மாடுகள் கடத்திச் செல்லப்படுவதாக, அச்சிறுபாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, அச்சிறுபாக்கம் அருகே ஆத்துார் சுங்கச்சாவடியில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, கோயம்புத்துார் மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த கார்த்திகேயன், 32, என்பவர், கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட, கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்தார்.இதில், 57 மாடுகள் போதிய, இடவசதியின்றி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. பின், ஓட்டுனரை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோசாலையில் மாடுகள் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை