மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
1 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
1 hour(s) ago
காலி மனையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
2 hour(s) ago
சித்தாமூர் : சித்தாமூர் அருகே இந்தலுார் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மக்கள் பயன்பாட்டிற்காக, 20 ஆண்டுகளுக்கு முன், இங்கு சமுதாயக்கூடம் கட்டப்பட்டது.கோட்டைப்புஞ்சை, பருக்கல், கயப்பாக்கம் உள்ளிட்ட கிராமவாசிகள், தங்களது குடும்பங்களின் நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம், பிறந்த நாள் விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை சமுதாய கூடத்தில் நடத்தி வந்தனர்.முறையான பராமரிப்பு இல்லாததால், சமுதாயக்கூடத்தை அப்பகுதிவாசிகள் பயன்படுத்த விருப்பம் காட்டாததால், சில ஆண்டுகளாக சமுதாயக்கூடம் சீரழிந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.இதனால், அப்பகுதிவாசிகள் தங்களின் குடும்ப சுப நிகழ்ச்சிகளை நடத்த, மண்டபம் தேடி சித்தாமூர், அச்சிறுபாக்கம் போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதம்அடைந்துள்ள சமுதாயக்கூடத்தை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
2 hour(s) ago