உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

மாமல்லபுரம், : கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில், முதுநிலை வருவாய் ஆய்வாளர், 'பிர்கா' எனப்படும் குறுவட்டங்களில், வருவாய் ஆய்வாளர்கள் பணியாற்றுகின்றனர்.ஓரிடத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியவர்களை, மாவட்ட வருவாய் அலுவலர் வாயிலாக வேறிடம் மாற்றப்படுவது வழக்கம்.அலுவலகங்களில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றியவர்கள், குறுவட்டத்திற்கும்; குறுவட்டத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றியவர்கள், அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளராகவும் நியமிக்கப்படுவர். தற்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, செங்கல்பட்டு மாவட்டத்தில் பணியாற்றிய 34 பேரை, பணியிடம் மாற்றி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை