உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருமுடிவாக்கத்தில் அடிக்கடி நெரிசல்

திருமுடிவாக்கத்தில் அடிக்கடி நெரிசல்

சென்னை : வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையை பயன்படுத்தி, ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இதன் சர்வீஸ் சாலை வழியே, பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குன்றத்துார் அருகே திருமுடிவாக்கத்தில், லாரிகள் நிறுத்தம் இடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தி, ஓட்டுனர்கள் ஓய்வெடுப்பர். இந்நிலையில், இங்கு நிறுத்தப்படும் லாரிகள் திருமுடிவாக்கத்தில், சர்வீஸ் சாலையின் எதிர் திசையில் செல்கின்றன. சர்வீல் சாலை குறுகலாக உள்ளதால் எதிரெதிரே வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சர்வீஸ் சாலையின் எதிர்திசையில் லாரிகள் வருவதை, குன்றத்துார் போலீசார் தடை செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி