மேலும் செய்திகள்
குறைதீர்வு கூட்டத்தில் 349 மனுக்கள் ஏற்பு
25-Nov-2025
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 283 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் நலன் காக்கும் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் தலைமையில், நேற்று நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் நரேந்திரன் பரிமளா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை, தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் அடுக்குமாடி வீடு ஒதுக்கீடு, வேலைவாய்ப்பு, மகளிர் உரிமைத்தொகை, மின் இணைப்பு, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 283 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க, மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் உத்தரவிட்டார். அதன் பின், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் துவங்க, மானியத்துடன் கூடிய கடனை, நான்கு பேருக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. உணவகம் நடத்த ஒருவருக்கு 2 லட்சம் ரூபாயும், மற்றொருவருக்கு 75,000 ரூபாய் வழங்கப்பட்டது. மேலும், 10 பேருக்கு தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன.
25-Nov-2025