உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குறைதீர் கூட்டத்தில் 312 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 312 மனுக்கள் ஏற்பு

செங்கல்பட்டு,செங்கல்பட்டு கலெக்டர் கூட்ட அரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் ஷேக் முகைதீன் தலைமையில், நேற்று நடந்தது. கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் விவரம்:இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை, குடிசை வீட்டிற்கு மின் இணைப்பு, விவசாய நிலப்பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைத்தல், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்தல், செங்கல்பட்டு - பொன்விளைந்தகளத்துார் வழியாக திருக்கழுக்குன்றத்திற்கு மீண்டும் பேருந்து, பட்டா மாற்றம், குடிநீர் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்.இவை உட்பட, 312 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, ஷேக் முகைதீன் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை