உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தலைமறைவு குற்றவாளி கைது

தலைமறைவு குற்றவாளி கைது

மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த பொத்தேரியைச் சேர்ந்தவர் சூர்யா, 22.இவர் மீது, மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, மணிமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில், கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.பல மாதங்களாக தலைமறைவாக இருந்த சூர்யாவை, போலீசார் வலைவீசி தேடி வந்தனர். ரகசிய இடத்தில் பதுங்கியிருந்த சூர்யாவை, போலீசார் பிடிக்க சென்றபோது, அவர் தப்பி ஓட முயன்றார்.அப்போது, கீழே தவறி விழுந்ததில், அவருக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டது. போலீசார் சூர்யாவை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்