உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அகில இந்திய கிரிக்கெட் தொடர் காஞ்சி அணி இரண்டாமிடம்

அகில இந்திய கிரிக்கெட் தொடர் காஞ்சி அணி இரண்டாமிடம்

காஞ்சிபுரம்:அகில இந்திய அளவிலான, கோவா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் போட்டி, கோவா மாநிலம், சவந்த்வாடி நகரில் ஜன., 28 முதல், பிப்., 3 வரை நடந்தது. தமிழகம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, கோவா, டில்லி ஆகிய மாநிலங்களில் இருந்து கிரிக்கெட் அணிகள் பங்கேற்று மோதின. இறுதிப்போட்டிக்கு கோவா அணியும், தமிழகத்தின் காஞ்சி கிரிக்கெட் அகாடமி அணியும் தேர்வாகி மோதின.இதில், கோவா அணி வெற்றி பெற்றது. இரண்டாம் இடத்துக்கான கோப்பை வென்ற காஞ்சிபுரம் அணிக்கு, போட்டி நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தொடரின் ஒழுக்கமான அணி என்ற சிறப்புப்பரிசும் வழங்கப்பட்டது.காஞ்சிபுரம் அணி வீரர்களுக்கு புதிய சூழ்நிலையில், புதிய அணிகளுடன் விளையாடிய சிறந்த அனுபவத்தை கொடுத்ததாக, பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற, காஞ்சி கிரிக்கெட் பயிற்சியாளர் வினோத்குமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ