உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கந்தசுவாமி கோவிலில் ஏல வருவாய் ரூ.141 கோடி

கந்தசுவாமி கோவிலில் ஏல வருவாய் ரூ.141 கோடி

திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், வரும் ஜூலை 1 முதல், 2026 ஜூன் 30ம் தேதி வரை, ஓராண்டு காலத்திற்கான பல வகை உரிமம் ஏலம், கடந்த மே 29ம் தேதி நடத்தப்பட்டது.இந்த ஏலம், செங்கல்பட்டு உதவி ஆணையர் ராஜலட்சுமி, ஆய்வாளர் பாஸ்கரன், செயல் அலுவலர் குமரவேல் ஆகியோரின் முன்னிலையில் நடத்தப்பட்டது.இதில் பிரசாத கடை உரிமம், 53.25 லட்சம் ரூபாய்; தற்காலிக கடை வரி வசூல் உரிமம், 1.66 லட்சம் ரூபாய்; வாகன பாதுகாப்பு கட்டணங்கள் பெறும் உரிமம், 4.61 லட்சம் ரூபாய்க்கு எடுக்கப்பட்டது. மேலும் ஆடு, கோழி சேகரிக்கும் உரிமம் ஏலம், 1.33 லட்சம் ரூபாய், வெள்ளி உரு விற்பனை உரிமம் ஏலம், 95,000 ரூபாய் என ஏலம் எடுக்கப்பட்டது.தொடர்ந்து, கடந்த 16ம் தேதி மறு ஏலம் நடத்தப்பட்டது. இதில், காணிக்கை முடி சேகரிக்கும் உரிமம், 56 லட்சம் ரூபாய், நெய் தீபம் விற்பதற்கான உரிமம், 23.75 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டது. இந்த ஏலத்தில் கோவிலுக்கு 141.55 கோடி ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி