உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சேதமடைந்த சிமென்ட் சாலை சூணாம்பேடு மக்கள் அவதி

சேதமடைந்த சிமென்ட் சாலை சூணாம்பேடு மக்கள் அவதி

சூணாம்பேடு, சூணாம்பேடு, ஜமீன் தெருவிலுள்ள சிமென்ட் சாலை, ஜல்லிகள் பெயர்ந்து சேதமடைந்து உள்ளதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.சூணாம்பேடு ஊராட்சியில் 10,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.ஊராட்சிக்கு உட்பட்ட ஜமீன்தெருவில், 10 ஆண்டுகளுக்கு முன் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.இப்பகுதி மக்கள் வெள்ளகொண்டகரம், புதுப்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல, இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.பராமரிப்பின்றி நாளடைவில், இந்த சிமென்ட் சாலை ஜல்லிகள் பெயர்ந்து சேதமடைந்து உள்ளது.இதனால், சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.மேலும், இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர். ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள சிமென்ட் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை