உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், கோட்ட அளவில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் இன்றும், நாளையும் நடக்கிறது. கலெக்டர் சினேகா வெளியிட்ட அறிக்கை: செங்கல்பட்டு மாவட்டத்தில், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கோட்டாட்சியர் தலைமையில் இன்று காலை 10:30 மணிக்கு நடக்கிறது. மதுராந்தகத்தில், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், பிற்பகல் 2:30 மணிக்கு நடக்கிறது. இதேபோல செங்கல்பட்டில், செங்கல்பட்டு சப் - கலெக்டர் அலுவலகத்தில், சப் - கலெக்டர் தலைமையில், நாளை காலை 10:30 மணிக்கு, விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டங்களில் விவசாயிகள் பங்கேற்று, கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன் பெறலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ