| ADDED : நவ 18, 2025 03:49 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 328 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம், கலெக்டர் சினேகா தலைமையில், நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் நரேந்திரன், பரிமளாதேவி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், இலவச வீட்டுமனை பட்டா, கனவு இல்ல வீடு, வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 328 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டார். அதன் பின், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு 'பேட்டரி'யால் இயங்கும் மடக்கு சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் சினேகா வழங்கினார்.