உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  கந்தசுவாமி கோவில் உண்டியல் வருவாய் ரூ.71 லட்சம்

 கந்தசுவாமி கோவில் உண்டியல் வருவாய் ரூ.71 லட்சம்

திருப்போரூர்திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், விழா மற்றும் முகூர்த்த நாட்களில், கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் பணம் மற்றும் நகை, வெள்ளிப் பொருட்கள், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படுகின்றன. கோவிலில், மொத்தம் 12 உண்டியல்கள் உள்ளன. இந்நிலையில், செங்கல்பட்டு உதவி கமிஷனர் ராஜலட்சுமி, திருப்போரூர் கோவில் செயல் அலுவலர் குமரவேல், செங்கல்பட்டு ஆய்வாளர் பாஸ்கரன், மேலாளர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலையில், நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில், 71 லட்சத்து 35 ஆயிரத்து 44 ரூபாய், 213 கிராம் தங்கம், 4,457 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் வருவாயாக கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை