உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூர் - மதுராந்தகம் வரையில் திருக்கழுக்குன்றம் வழியே பஸ் சேவை பயணியர் எதிர்பார்ப்பு

திருப்போரூர் - மதுராந்தகம் வரையில் திருக்கழுக்குன்றம் வழியே பஸ் சேவை பயணியர் எதிர்பார்ப்பு

திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டத்தில், ஜி.எஸ்.டி., சாலையில் பிரபல நகராட்சியாகவும், வருவாய் கோட்டமாகவும் மதுராந்தகம் விளங்குகிறது. இங்கு, அரசு மருத்துவமனை, நீதிமன்றம், ஏரிகாத்த ராமர் கோவில் ஆகியவை உள்ளன.அதேபோல, சமயக்குரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில், அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக மையமாக திருக்கழுக்குன்றம் விளங்குகிறது.அதேபோல், ஆன்மிக நகரமாகவும், சட்டசபை தொகுதி தலைமையிடமாகவும், நுாற்றுக்காணக்கான தொழில் நிறுவனங்களை கொண்டதாகவும், திருப்போரூர் விளங்குகிறது.சிறப்புபெற்ற இப்பிரதான மூன்று ஆன்மிக நகரங்களை இணைக்கும் விதத்தில், தற்போது சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, நல்ல சாலை வசதியும் உள்ளது.இச்சாலை வழியே நேரடி பேருந்து வசதி இல்லை. இதனால், செங்கல்பட்டு சென்று, பின் மதுராந்தகத்திற்கோ, திருப்போரூருக்கோ செல்ல வேண்டியுள்ளது.இந்த வழித்தடத்தில் நேரடி பேருந்து வசதி ஏற்படுத்தினால், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல கிராம மக்கள் பயனடைவர்.எனவே, முக்கியத்துவமான இச்சாலையில், நேரடி பேருந்து சேவை துவங்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை