மேலும் செய்திகள்
ரேஷன் கார்டுதாரர் குறைதீர் முகாம்
12-Jul-2025
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், ஆறு தாலுகாக்களில் இன்று, ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம் போன்ற திருத்தங்கள் செய்ய, இன்று சிறப்பு முகாம் நடக்கிறது. இதுகுறித்து, கலெக்டர் சினேகா வெளியிட்ட அறிக்கை: செங்கல்பட்டு மாவட்டத்தில் கீழ்கண்ட கிராமங்களில் இன்று, ரேஷன் கடைகளில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடக்கிறது. இதில், தகுந்த ஆவணங்கள் கொடுத்து, கார்டுதாரர்கள் தங்களது ரேஷன் கார்டில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம். ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தரம் குறித்த புகார்களையும், இந்த முகாமில் பதிவு செய்யலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
12-Jul-2025