பாக்கத்தில் வணிக வளாகம் பயன்பாடின்றி வீணாகும் அவலம்
மதுராந்தகம்:மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாக்கம் ஊராட்சியில், சாலையோரம் கட்டப்பட்ட வணிக வளாகத்தை திறந்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம், வள்ளலார் திருமண மண்டபம் அருகே, கனிமவள நிதி திட்டத்தின் கீழ், 2013 -- 14ல், ஊராட்சிக்கு வருவாய் ஈட்டும் வகையில், ஐந்து கடைகள் கட்டப்பட்டன.இந்த கடைகள் கட்டப்பட்டது முதல், தற்போது வரை திறக்கப்படாமல், 20 ஆண்டுகளாக பூட்டியே வைக்கப்பட்டுள்ளன.அதனால், அருகே உள்ள ஆலமரத்திலிருந்து விழுதுகள் கட்டடத்தில் படர்ந்து, கட்டடம் சேதமாகி உள்ளது.எனவே, ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் கட்டடத்தை ஆய்வு செய்து, ஊராட்சிக்கு வருவாய் ஈட்டும் வகையில், கட்டப்பட்ட கடைகளை பொது ஏலம் விட்டு, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.