மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
2 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
2 hour(s) ago
திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோற்சவ தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது.செங்கல்பட்டு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆன்மிக நகரங்களில் ஒன்றாக திருப்போரூர் விளங்குகிறது. இங்கு, அறுபடை வீட்டிற்கு நிகரான கந்தசுவாமி கோவில் உள்ளது. கந்த பெருமான் சுயம்பு மூர்த்தியாகவும், மும்மூர்த்தி அம்சமாகவும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.மாதந்தோறும் பரணி, கிருத்திகை, சஷ்டி, விசாகம் நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதுதவிர கந்தசஷ்டி, மாசி பிரம்மோற்சவம், மாணிக்கவாசகர் உற்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்கள் நடக்கின்றன.அந்த வகையில், இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பிரம்மோற்சவ பெருவிழா, கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.தினமும், கந்த பெருமான் கிளி, யானை, மயில் உட்பட வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். முக்கிய விழாவாக, ஏழாம் நாள் உற்சவமான தேர் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது.நேற்று காலை 7:00 மணிக்கு உற்சவர் கந்தனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, கந்தபெருமான் விசேஷ அலங்காரத்தில், கோவிலில் இருந்து தேரடிக்கு 'அரோகரா...' கோஷங்களுடன் பக்தர்கள் வெள்ளத்தில் புறப்பட்டார். பின், சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் கந்தபெருமான் எழுந்தருளினார். காலை 9:30 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து தேரோட்டத்தை துவக்கினர்.பக்தர்கள் 'கந்தா, சண்முகா, முருகா...' என, கோஷங்கள் எழுப்பி வடம் பிடித்து இழுத்தனர்.தேரடியிலிருந்து புறப்பட்ட தேர் கிழக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, மேற்கு மாடவீதி, வடக்கு மாடவீதி வழியாக, மதியம் 2:00 மணிக்கு தேரடிக்கு வந்தது.தேர் உற்சவத்தை ஒட்டி, மாட வீதி பகுதிகளில் பக்தர்களுக்கு அன்னதானம், நீர், மோர், பழக்குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.விழாவில், திருப்போரூர் பகுதிகள் மட்டுமின்றி மாவட்டத்தின் பல இடங்களிலிருந்தும் பக்தர்கள் குவிந்து, கந்தனை பக்தி பரவசத்துடன் வழிபட்டு சென்றனர்.விழா ஏற்பாடுகளை, செங்கல்பட்டு உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன், கந்தசுவாமி கோவில் செயல் அலுவலர் குமரவேல், மேலாளர் வெற்றிவேல் மற்றும் உபயதாரர்கள் உள்ளிட்ட குழுவினர் செய்தனர்.மாமல்லபுரம் டி.எஸ்.பி., ரவி அபிராம், திருப்போரூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் போக்குவரத்து ஒழுங்குபடுத்தல், உயர்கோபுரம் அமைத்து குற்ற சம்பங்கள் நடக்காமல் கண்காணித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும், நெரிசல் இன்றி வாகனங்கள் செல்லும் வகையில், திருப்போரூர் மாடவீதிக்கு வரும் வாகனங்கள் புதிய ஆறு வழிச்சாலை, கிரிவல சாலை வழியாக திருப்பி விடப்பட்டது.
2 hour(s) ago
2 hour(s) ago