உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இருவர் துாக்கிட்டு தற்கொலை

இருவர் துாக்கிட்டு தற்கொலை

சித்தாமூர்:சித்தாமூர் அருகே போந்துாரைச் சேர்ந்தவர் ஆனந்த் பாபு, 29; சமையல் மாஸ்டர். இவர், நேற்று முன்தினம் இரவு பூரியம்பாக்கம் வயல்வெளியில் இருந்த வேப்பமரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.நேற்று காலை வயல்வெளிக்கு சென்ற விவசாயிகள், துாக்கில் தொங்கிய நிலையில் இருந்த ஆனந்த் பாபுவை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின், சித்தாமூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.உடலை கைப்பற்றிய போலீசார், மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.* அதேபோல சித்தாமூர் அருகே தேவாதுாரைச் சேர்ந்த நாராயணசாமி 54, என்பவர், நேற்று முன்தினம் இரவு வயிற்று வலி தாங்க முடியாமல் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை