உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செங்கை தடத்தில் மேலும் 8 ரயில் ரத்து

செங்கை தடத்தில் மேலும் 8 ரயில் ரத்து

சென்னை,

பல்லாவரம் - கூடுவாஞ்சேரி

சிறப்பு பேருந்துகள் இயக்கம்தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, பல்லாவரம் - கூடுவாஞ்சேரி இடையிலான ரயில் சேவையை, ஆக., 3 முதல் 14ம் தேதி வரை, காலை, 9:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை, தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.இந்த நேரத்தில், ரயில் போக்குவரத்து, சென்னை கடற்கரை முதல் பல்லாவரம் வரையிலும் மற்றும் கூடுவாஞ்சேரி முதல் செங்கல்பட்டு வரையிலும் மட்டுமே இயக்கப்படும்.எனவே, ஆக., 3 முதல் 14ம் தேதி வரை, மாநகர பேருந்து போக்குவரத்து கழகத்தால், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.இந்த பேருந்துகள், பல்லாவரம் முதல் கூடுவாஞ்சேரி வழியாக செங்கல்பட்டு வரையிலும், செங்கல்பட்டு முதல் கூடுவாஞ்சேரி வழியாக பல்லாவரம் வரையிலும் இயக்கப்பட உள்ளன.தாம்பரம் ரயில்வே யார்டில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால், கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில் நாளை முதல் வரும் 14ம் தேதி வரை ஏற்கனவே 55 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், நாளை முதல் மேலும் எட்டு மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.இது குறித்து, சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தாம்பரம் - கடற்கரைக்கு காலை 7:17, 8:19, 9:00, 9:22, 9:40, 9:50 மணி மற்றும் மாலை 6:26, இரவு 7:15 மணி ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரை - பல்லாவரத்துக்கு காலை 9:30, 9:45, 10:00, 10:15, 10:30, 11:00, 11:15, 11:30, 11:45, நண்பகல் 12:00, 12:15, 12:30, 12:45, இரவு 10:40, 11:05, 11:30, 11:59 மணிக்கு பயணியர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் பல்லாவரம் - கடற்கரைக்கு காலை 10:17, 10:32, 10:47, 11:02, 11:17, 11:32, 11:47, நண்பகல் 12:02, 12:17, 12:32, 12:47, மதியம் 1:02, 1:17, 1:42 இரவு 11:30, 11:55 மணிக்கு பயணியர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் வரும் 3ம் தேதி முதல் 14ம் தேதி வரை, செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு இயக்கப்படும் மின்சார விரைவு ரயில்கள், தாம்பரம் - கடற்கரை இடையே அனைத்து நிலையங்களிலும் நின்று செல்லும். இதன்படி, செங்கல்பட்டு - கடற்கரை இடையே காலை 7:45, 8:05, 8:50 மின்சார விரைவு ரயில்களும், அரக்கோணம் - கடற்கரை இடையே, மாலை 5:15 மணி ரயிலும், தாம்பரம் - கடற்கரை இடையே அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.தாம்பரம் - கடற்கரை இடையே காலை 8:26, 8:39 மணிக்கு இயக்கப்படும் பெண்களுக்கான ரயில்கள், நாளை முதல் 14ம் தேதி வரை அனைவரும் பயணம் செய்யும் வகையில் மாற்றம் செய்யப்படுகிறது.

ஆவடி தடம்

ஆவடி ரயில் யார்டு மேம்பாட்டு பணி காரணமாக, சென்ட்ரல் - ஆவடி தடத்தில் நான்கு மின்சார ரயில்களின் சேவை இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. இரவு 11:50 மணி பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - ஆவடி, இரவு 11;40 மணி சென்ட்ரல் - ஆவடி ரயில் இன்றும், 4ம் தேதியும் ரத்து செய்யப்படும். நள்ளிரவு 12:15 மணி சென்ட்ரல் - ஆவடி, அதிகாலை 3:00 மணி ஆவடி - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் ரயில் வரும் 3, 5ம் தேதிகளில் ரத்து செய்யப்படும்.இரவு 10:40 மணி சென்ட்ரல் - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங், இரவு 10:45 மணி பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - சென்ட்ரல் ரயில் இன்றும், 4ம் தேதியிலும், ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும் அதிகாலை 3:30 மணி பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - சென்ட்ரல் ரயில், வரும் 3, 5ம் தேதிகளில் ஆவடியில் இருந்து இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்லாவரம் - கூடுவாஞ்சேரி

சிறப்பு பேருந்துகள் இயக்கம்தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, பல்லாவரம் - கூடுவாஞ்சேரி இடையிலான ரயில் சேவையை, ஆக., 3 முதல் 14ம் தேதி வரை, காலை, 9:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை, தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.இந்த நேரத்தில், ரயில் போக்குவரத்து, சென்னை கடற்கரை முதல் பல்லாவரம் வரையிலும் மற்றும் கூடுவாஞ்சேரி முதல் செங்கல்பட்டு வரையிலும் மட்டுமே இயக்கப்படும்.எனவே, ஆக., 3 முதல் 14ம் தேதி வரை, மாநகர பேருந்து போக்குவரத்து கழகத்தால், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.இந்த பேருந்துகள், பல்லாவரம் முதல் கூடுவாஞ்சேரி வழியாக செங்கல்பட்டு வரையிலும், செங்கல்பட்டு முதல் கூடுவாஞ்சேரி வழியாக பல்லாவரம் வரையிலும் இயக்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை