உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 2வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை

2வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை

பெரம்பூர்: பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலையைrf சேர்ந்தவர் முக்தார். இவரது மகன் அபு பக்கர், 3. கடந்த 12ம் தேதி இரவு 7:00 மணியளவில், வீட்டின் 2வது மாடியில் அபுபக்கர் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, மேலே இருந்து கீழே எட்டி பார்க்கையில் தவறி கீழே விழுந்தான். பெற்றோர் குழந்தையை மீட்டு, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது குழந்தை மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி