உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செங்கல்பட்டு சாலையில் ஆறாக ஓடிய டீசல்

செங்கல்பட்டு சாலையில் ஆறாக ஓடிய டீசல்

செங்கல்பட்டு, கர்நாடக மாநிலம், பெங்களூருவில் ஏற்றப்பட்ட கெமிக்கல் மூட்டைகளை, திருப்போரூரில் ஒரு தொழிற்சாலையில், நேற்று முன்தினம் இறக்கிய சரக்கு லாரி, அங்கிருந்து இரவு புறப்பட்டது. ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஜெயகுமார், 58, லாரியை ஓட்டினார்.ராணிப்பேட்டை நோக்கி லாரி சென்று கொண்டிருந்த நிலையில் செங்கல்பட்டு அருகில், வல்லம் ரயில்வே மேம்பாலம் ரவுண்டானா பகுதியில் திரும்பியது.அப்போது, தடுப்பு சுவரில் மோதி டீசல் டேங்க் உடைந்தது. இதில், மேம்பாலம் முழுதும் ஆறு போல டீசல் ஓடியது. தகவலறிந்து வந்த செங்கல்பட்டு நகர போலீசார், வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருக்க, மணல் கொட்டி தடுப்பு அமைத்தனர். விபத்து குறித்து, டிரைவர் ஜெயக்குமாரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை