உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வேறு பெண்ணுடன் தொடர்பு தந்தையின் பல்லை உடைத்த மகன்

வேறு பெண்ணுடன் தொடர்பு தந்தையின் பல்லை உடைத்த மகன்

புழல், புழல் அடுத்த புத்தகரம் 4வது தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தன், 46; கட்டுமான பொருட்கள் சப்ளையர். இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு, இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர்.கோவிந்தனுக்கும், அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த இரண்டு ஆண்டாக பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில், கோவிந்தனுக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு, அவருடன் வசித்து வந்தார். இதனால், தந்தையின் மீது, மூத்த மகன் குப்புசாமிக்கு, 26; வெறுப்பு ஏற்பட்டது. அவர், நேற்று முன்தினம் இரவு, வினாயகபுரம் அருகே, தனது தந்தையை சந்தித்தார்.அப்போது, குடும்ப பிரச்னை தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலானது. இதனால் ஆத்திரமடைந்த குப்புசாமி, அங்கிருந்த உருட்டு கட்டையால் தந்தையை சரமாரியாக தாக்கினார். இதில், கோவிந்தனின் பல் உடைந்தது. பலத்த காயமடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரித்த புழல் போலீசார், நேற்று காலை குப்புசாமியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை