உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சோழமண்டலம் நிறுவன ஊழியர்கள் அடாவடி

சோழமண்டலம் நிறுவன ஊழியர்கள் அடாவடி

தாம்பரம், சேலையூரைச் சேர்ந்தவர் ஆனந்தன், 43; 'எர்த் மூவர்ஸ்' நிறுவனம் நடத்தி வருகிறார். தாம்பரத்தில் உள்ள சோழமண்டலம் பைனான்ஸ் நிறுவனத்தில், லோன் பெற்று, கார் ஒன்று வாங்கியுள்ளார்.காருக்கு ஒரு மாத தவணை கட்டவில்லை என, சில நாட்களுக்கு முன், அவரது வீட்டிற்கு சென்ற பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள், ஆனந்தனை தாக்கியதாகவும், அதில், ஆனந்தனின் காது ஜவ்வு கிழிந்ததாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து, சேலையூர் காவல் நிலையத்தில் ஆனந்தன் புகார் அளித்தார். ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்காததால், ஆனந்தனுக்கு ஆதரவாக, தமிழ்நாடு கட்டுமான இயந்திர உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த, 20க்கும் மேற்பட்டோர், தாம்பரத்தில் உள்ள சோழமண்டலம் பைனான்ஸ் நிறுவனத்தை, நேற்று காலை முற்றுகையிட்டனர்.இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின், தாம்பரம் போலீசார் வந்து பேச்சு நடத்தி சமாதானப்படுத்தியதை அடுத்து, முற்றுகையிட்டோர் கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி