உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிகரெட் தீக்காயத்துடன் இறந்து கிடந்த மீனவர்

சிகரெட் தீக்காயத்துடன் இறந்து கிடந்த மீனவர்

மெரினா, மெரினா, அயோத்திக் குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர் காத்தவராயன், 52. கடற்கரையில் வலைகள் மீது இவர் படுத்து துாங்குவது வழக்கம். நேற்று காலை கடற்கரையில் காத்தவராயன், உடலில் சில இடங்களில் சிகரெட்டால் சூடு போடப்பட்ட தீக்காயங்களுடன் மர்ம முறையில் இறந்து கிடந்துள்ளார். அதைபார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காத்தவராயன் உடலை மீட்ட போலீசார், மர்மசாவு குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை