உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மனைவிக்கு இஸ்திரி சூடு சந்தேக கணவர் கைது

மனைவிக்கு இஸ்திரி சூடு சந்தேக கணவர் கைது

சென்னை, புரசைவாக்கம், குழந்தைவேலு தெருவைச் சேர்ந்தவர் நாசியா, 32. இவர், ஓட்டேரியைச் சேர்ந்த காலித், 32, என்பவரை ஆறு ஆண்டுகளாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 2019ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்; குழந்தை இல்லை. போதைப் பழக்கத்திற்கு அடிமையான காலித்திற்கு சில பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. அதேநேரம், மனைவி மீதும் சந்தேகம் இருந்துள்ளது. இதனால், தினசரி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில், 26ம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை இஸ்திரி பெட்டியை சூடேற்றி உறங்கி கொண்டிருந்த மனைவியின் உடலில், ஆறு இடங்களில் காலித் சூடுபோட்டுள்ளார்.அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரிடம் மாஜிஸ்திரேட் தாமோதரன் மற்றும் போலீசார் விசாரித்தனர். வேப்பேரி போலீசார், நேற்று காலித்தை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்