சென்னை, சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:பொன்னேரி - மீஞ்சூர் ரயில் நிலையங்கள் இடையே, வரும் 25, 26, 27ம் தேதிகளில் காலை 9:25 மணி முதல் 11:40 மணி வரை ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், இந்த தடத்தில் சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.ஒரு பகுதி ரத்து: சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி காலை 9:30, காலை 10:35 மணி ரயில்கள் வரும் 25, 26ம் தேதிகளில் மீஞ்சூர் வரை மட்டுமே இயக்கப்படும் சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி காலை 9:40 மணி ரயில் வரும் 25, 26ம் தேதிகளில் எண்ணுார் வரை மட்டுமே இயக்கப்படும் கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் காலை 9:55 மணி ரயில் வரும் 25, 26, 27ம் தேதிகளில் மீஞ்சூரில் இருந்து இயக்கப்படும் கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை காலை 10:55 மணி ரயில் வரும் 25, 26ம் தேதிகளில் மீஞ்சூரில் இருந்து இயக்கப்படும் சூலுார்பேட்டை - சென்னை சென்ட்ரல் காலை 10:00 மணி ரயில் வரும் 25, 26ம் தேதிகளில் எண்ணுாரில் இருந்து இயக்கப்படும் சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி காலை 9:00 மணி ரயில் வரும் 27ம் தேதி மீஞ்சூர் வரை மட்டுமே இயக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்பதிவில்லா ரயில்கள்
சென்னை, மார்ச் 24-ஹோலி பண்டிகையொட்டி, கூட்ட நெரிசல் மிக்க வழித்தடங்களில், 25க்கும் மேற்பட்ட கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை எழும்பூர் - மேற்கு வங்கம் மாநிலம் சந்திரகாச்சி இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்க, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து வரும் 30, ஏப்., 6 மற்றும் இரவு 11:00 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், அடுத்த 3வது நாளில் காலை 7:50 மணிக்கு, சந்திரகாச்சி சென்றடையும். சந்திரகாச்சியில் இருந்து வரும் 25, ஏப்., 1, 8ம் தேதி காலை 10:00 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், மறுநாள் மாலை 3:30 மணிக்கு, சென்னை எழும்பூருக்கு வந்தடையும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.