உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாலிபரின் உடல் உறுப்பு தானம் ஐந்து பேருக்கு மறுவாழ்வு 

வாலிபரின் உடல் உறுப்பு தானம் ஐந்து பேருக்கு மறுவாழ்வு 

சென்னை:சாலை விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்பு தானத்தால், ஐந்து பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை, விவேகானந்தர் நகரைச் சேர்ந்தவர் உதயகுமார், 28. கடந்த, 24ம் தேதி இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். பின், மேல் சிகிச்சைக்காக, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உதயகுமார் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை தானமளிக்க, குடும்பத்தினர் முன்வந்தனர்.அதன்படி, இரண்டு சிறுநீரகம், இதயம், கல்லீரல், எலும்பு ஆகிய ஐந்து உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. அதில், ஒரு சிறுநீரகம் மற்றும் எலும்பு ஆகியவை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும், மற்ற உறுப்புகள் தனியார் மருத்துவமனைகளுக்கும் தானமாக அளிக்கப்பட்டுள்ளன. இந்த வாலிபரின் உடல் உறுப்பு தானத்தால், ஐந்து பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை