உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருப்பதி ரயில் சேவை 31ம் தேதி வரை மாற்றம்

திருப்பதி ரயில் சேவை 31ம் தேதி வரை மாற்றம்

சென்னை:திருப்பதி ரயில் பணிமனையில் மேம்பாட்டு பணி நடப்பதால், சென்னை சென்ட்ரல் - திருப்பதி செல்லும் ரயில்கள், வரும் 31ம் தேதி வரை ரேணிகுண்டா வரை மட்டுமே இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து, தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு: ★ சென்னை சென்ட்ரல் - திருப்பதி காலை 6:25 மணி சப்தகிரி விரைவு ரயில், வரும் 31ம் தேதி வரை ரேணிகுண்டா வரை மட்டுமே இயக்கப்படும்★ திருப்பதி - சென்ட்ரல் மாலை 6:05 மணி சப்தகிரி விரைவு ரயில், 31ம் தேதி வரை ரேணிகுண்டாவில் இருந்து இயக்கப்படும் ★ சென்ட்ரல் - திருப்பதி மதியம் 2:25 மணி விரைவு ரயில், 31ம் தேதி வரை ரேணிகுண்டா வரை மட்டுமே ஓடும்★ திருப்பதி - சென்ட்ரல் காலை 10:10 மணி விரைவு ரயில், 31ம் தேதி வரை ரேணிகுண்டாவில் இருந்து இயக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி