உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பல வகை கிருஷ்ணர் பொம்மை ஆழ்வார்பேட்டையில் கண்காட்சி

பல வகை கிருஷ்ணர் பொம்மை ஆழ்வார்பேட்டையில் கண்காட்சி

சென்னை, கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு, ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி.ஆர்ட்., மையத்தில், 'கிருஷ்ணர் தரிசனம்'எனும் தலைப்பில் கண்காட்சி துவங்கி உள்ளது.புராண கதைகளில் வரும் கிருஷ்ணரின் பாத்திரங்களின்படி, சிலை, படங்கள் அடங்கிய, அரிய தொகுப்புகள், கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.மேலும், பஞ்சலோகம், காகிதக்கூழ், வெண்கலம், பித்தளையால் ஆன புல்லாங்குழல், பசுவுடன் கூடிய கண்ணன், வெண்ணெய் திருடிய கண்ணன், ஆலிலை கண்ணன், பாமா ருக்மணி கண்ணன் என, பல வடிவ கிருஷ்ணர் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.கண்காட்சியை முன்னிட்டு, 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. செப்., 1ம் தேதி வரை, பூம்புகார் நிறுவனம் சார்பில் நடத்தப்படும் இந்த கண்காட்சிக்கு, தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.கைவினைஞர்களின் படைப்பு பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் இக்கண்காட்சி நடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை