உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின்சாரம் பாய்ந்து வெல்டர் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து வெல்டர் உயிரிழப்பு

திருவேற்காடு, மாங்காடு, பரணி புத்துரைச் சேர்ந்தவர் அப்துல் நசீர், 38; வெல்டர். இவர் ஒரு வாரமாக, திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடி சவீதா பல் மருத்துவக் கல்லுாரியில், 'வாட்டர் ட்ரீட்மென்ட் பிளான்ட் ஷெட்' அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில், அப்துல் நசீர், வெல்டிங் செய்து கொண்டிருந்த போது, திடீரென மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். திருவேற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்