உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லாரி மோதி கணவர் முன் மனைவி பலி

லாரி மோதி கணவர் முன் மனைவி பலி

மறைமலை நகர், மறைமலை நகர் அடுத்த கீழக்கரணை தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன், 58. இவரது மனைவி வீரலட்சுமி, 54.தம்பதி நேற்று முன்தினம் இரவு, மறைமலை நகர் 'டென்சி' ஜி.எஸ்.டி., சாலையோரம் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு பொருட்கள் வாங்க டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., ஸ்கூட்டரில் சென்றனர்.அதன்பின், ஜி.எஸ்.டி., சாலையில் வீட்டிற்கு சென்றபோது, மணலியில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற டேங்கர் லாரி, சந்திரனின் ஸ்கூட்டரில் மோதியது. இதில், பின்னால் அமர்ந்திருந்த வீரலட்சுமி நிலைதடுமாறி கீழே விழுந்ததில், லாரியின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.மறைமலை நகர் போக்குவரத்து போலீசார் உடலை மீட்டனர். விபத்து ஏற்படுத்திய டேங்கர் லாரி ஓட்டுனரான கடலுாரைச் சேர்ந்த முத்துவேல், 50, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ