தடை மீறும் ஷேர் ஆட்டோக்கள் நடவடிக்கை எடுக்கப்படுமா?
சென்னை:அண்ணாசாலையில், தடையை மீறி 'நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தப்படும் ஷேர் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னையின் பிரதான சாலையான அண்ணாசாலையில், போக்குவரத்து நெரிசலின்றி வாகனங்கள் செல்ல வழிவகை செய்யும் விதமாக, வாகனங்கள் கணக்கெடுக்கப்பட்டன.தொடர்ந்து, ஸ்பென்சர் சிக்னல் - டேம்ஸ் சாலை வரையிலான அண்ணாசாலையில் வாகனங்கள் நிறுத்த, போக்குவரத்து போலீசார் தடை விதித்தனர்.மேலும், 10 இடங்களில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்டு உள்ளது என்பதை அறிந்து கொள்ளும் விதமாக, பதாகைகளை அமைத்தனர்.ஆனால், தடையை மீறி எல்.ஐ.சி., பேருந்து நிறுத்தத்திற்கு முன், ஷேர் ஆட்டோக்கள் அதிக அளவில் அணிவகுத்து நிறுத்தப்படுகின்றன. இதனால், அரசு பேருந்து ஓட்டுனர்கள் மட்டுமின்றி, பயணியருக்கும் இடையூறு ஏற்படுகிறது.எனவே, சாலையில் தடையை மீறி நிறுத்தப்படும் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.