உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ராஜிவ்காந்தி மருத்துவமனையில் ரத்த காயங்களுடன் கிடந்த சடலம்

ராஜிவ்காந்தி மருத்துவமனையில் ரத்த காயங்களுடன் கிடந்த சடலம்

சென்னை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரத்த காயங்களுடன் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தினசரி 15,000 புறநோயாளிகள், 3,000 உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இதனால், 24 மணி நேரமும் மருத்துவமனை பரபரப்பாக இயங்கி வருகிறது.இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தலை, இடது கண், இரண்டு கை முட்டிகளில் ரத்த காயங்களுடன், உடல் முழுக்க சேறுடன் ஆண் சடலத்தை கண்டு நோயாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலை தொடர்ந்து, மருத்துவமனை வளாக போலீசார் சடலத்தை மீட்டு, கொலையா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ