உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கன்டெய்னர் மோதி வாலிபர் பலி

கன்டெய்னர் மோதி வாலிபர் பலி

திருவொற்றியூர், கன்டெய்னர் லாரி மோதி, பைக்கில் பயணித்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.மணலிபுதுநகர், கலைஞர் நகரைச் சேர்ந்தவர் பிரசாந்த், 23; ஷிப்பிங் டிரான்ஸ்போர்டில் வேலை பார்த்தார். இவருக்கு திருமணமாகி சங்கீதா என்ற மனைவியும், இரண்டு வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.நேற்று முன்தினம் இரவு தன் பைக்கில், மணலி விரைவு சாலை, கெனால் சாலை சந்திப்பில் சென்றார். அப்போது, சென்னை துறைமுகத்தில் இருந்து, மணலி நோக்கி வந்த கன்டெய்னர் லாரி, சந்திப்பில் திரும்ப முயன்ற போது, எதிரே பைக்கில் வந்த பிரசாந்த் மீது மோதியது.இதில், லாரியின் சக்கரத்தில் தலை நசுங்கி, சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சாத்தாங்காடு போலீசார், இறந்தவர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், விபத்து ஏற்படுத்திய கன்டெய்னர் லாரி ஓட்டுனரான, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அபிஷேக் சிக்கர் வால், 37, என்பவரை, கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை