கலை திருவிழா 12ல் துவக்கம் கலை திருவிழா நாளை மறுநாள் துவக்கம்
சென்னை,அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாவட்ட அளவிலான கலைத்திருவிழா நாளை மறுநாள் துவங்குகிறது.பள்ளி மாணவர்களின் கலைத்திறனை வெளிக்கொண்டு வரும் வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி, வட்டார, மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலை திருவிழா நடக்க உள்ளது.அதன்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில், மாணவ - மாணவியருக்கு நாளை மறுநாள் கலைத்திருவிழா துவங்கி நடக்க உள்ளது.போட்டியில், வட்டார அளவில் வென்ற, 2,200 அரசு பள்ளி மாணவர்கள், 2,000 அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.