உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பொறியியல் அதிசயம்... ரிவர்ஸில் வரும் தண்ணீர்! ரூ.62 கோடி கொட்டியும் வீண் வேளச்சேரிக்கு வெள்ள அபாயம்

பொறியியல் அதிசயம்... ரிவர்ஸில் வரும் தண்ணீர்! ரூ.62 கோடி கொட்டியும் வீண் வேளச்சேரிக்கு வெள்ள அபாயம்

வேளச்சேரி, வெள்ள பாதிப்பை தடுக்க 3.5 கி.மீ., துாரத்திற்கு அமைக்கப்பட்ட மூடு கால்வாயில், வெள்ளம் பின்னோக்கி பாய்வதால், மீண்டும் வேளச்சேரி வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. திட்டமிடலின்றி கட்டப்பட்ட இந்த மூடுகால்வாயால், 62 கோடி ரூபாய் வீணானதே மிச்சம் என, வேளச்சேரி மக்கள் குமுறுகின்றனர். வடகிழக்கு பருவமழையின்போது, சென்னையில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்படும் பகுதிகளில் ஒன்றாக வேளச்சேரி உள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நீரோட்டம் தடைபட்டதால், 2002 மற்றும் 2015ல் வீடுகளின் ஒரு மாடி வரை வெள்ளத்தில் மூழ்கின. ஜெயலலிதா உத்தரவு மழையின்போது, வேளச்சேரி ஏரி உபரி நீர் கால்வாயில் செல்லும் வெள்ளம், சதுப்பு நிலத்தில் உள்வாங்காததே வெள்ள பாதிப்பிற்கு பிரதான காரணமாக இருந்தது. இதற்கு தீர்வு காண, 2005ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா, பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, வேளச்சேரி உபரி நீர் கால்வாயில் இருந்து பகிங்ஹாம் கால்வாய்க்கு, 'இணைப்பு மூடு கால்வாய்' கட்ட உத்தரவிட்டார். இதையடுத்து, உபரி நீர் கால்வாயின் விஜயநகர் சந்திப்பில் இருந்து, தரமணி நுாறடி சாலை வழியாக பகிங்ஹாம் கால்வாய் வரை, 3.5 கி.மீ., நீளத்திற்கு, 18 அடி அகலம், 7 அடி ஆழத்தில் மூடு கால்வாய் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக, 35 கோடி ரூபாய் ஒதுக்கி, 2011ல் பணிகள் துவங்கின. டி.சி.எஸ்., சந்திப்பு அருகில், பாறை இருந்ததால் பணிகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, மீண்டும் 27 கோடி ரூபாய் ஒதுக்கி மேற்கொள்ளப்பட்ட பணிகள், ஆமை வேகத்தில் நடந்தன. நிலைமை தலைகீழ் இந்நிலையில், 2016ம் ஆண்டு, 'ஜீரோ பாயின்ட்' பகுதியான விஜயநகர் சந்திப்பில், இரண்டடுக்கு மேம்பாலம் கட்ட பூஜை போட்டதால், மூடு கால்வாய் பணி அவசரகதியில் முடிக்கப்பட்டது. வேளச்சேரி - -தரமணி சாலையின் இருபுறமும் உள்ள, 4 அடி அகல வடிகாலும், இந்த மூடு கால்வாயுடன் இணைக்கப்பட்டது. இந்த மூடுகால்வாய் வழியாக, வேளச்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் வடியும் 60 சதவீத மழைநீர், பகிங்ஹாம் கால்வாயை அடைய வேண்டும். ஆனால், நிலைமை தலைகீழானது. மூடு கால்வாயில், 20 சதவீதம் வெள்ளம் மட்டும் பகிங்ஹாம் கால்வாய் சென்றது. கடந்த 2021ல், இந்த கால்வாயை மழைக்கால சிறப்பு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். அதில், வெள்ளம் பின்னோக்கி பாய்வதை கண்டறிந்து, அதன் அறிக்கையை அரசுக்கு அனுப்பினர். அதன்பின், எந்த சீரமைப்பு பணியும் மேற்கொள்ளவில்லை. இதனால், அடுத்தடுத்த பருவமழையில் வெள்ள பாதிப்புக்கு இந்த மூடு கால்வாயில் பின்னோக்கி பாயும் வெள்ளம், முக்கிய காரணமாக உள்ளது. 'வெள்ளச்சேரி' இது குறித்து, வேளச்சேரி, நலச்சங்க நிர்வாகி குமாரராஜா கூறியதாவது: எந்த நோக்கத்திற்காக மூடு கால்வாய் கட்டப்பட்டதோ, அது நிறைவேறவில்லை. மக்கள் வரிப்பணித்தில், 62 கோடி ரூபாய் வீணடித்ததை தவிர, வேறு எதுவும் நடக்கவில்லை. தற்போது, உட்புற சாலைகளில் அதிக எண்ணிக்கையில் வடிகால்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால், வரும் பருவமழைக்கும், வேளச்சேரி என்பது வெள்ளச்சேரியாக மாறுவது நிச்சயம். இவ்வாறு அவர்கள் கூறினர். கால்வாயின் நிலவரம் என்ன? * வேளச்சேரி விரைவு சாலை மற்றும் தண்டீஸ்வரம் சாலை சந்திக்கும், ‛ஜீரோ பாயின்ட்' இடத்தில், 150 அடி துாரத்தில், இணைப்பு மூடு கால்வாயின் குறுக்கே, குடிநீர் மற்றும் கழிவுநீருக்கான, ஏழு குழாய்கள் செல்கின்றன. இதில், குப்பை, மண் எளிதாக அடைப்பதால், கால்வாயில் மழைநீர் செல்வது தடைபடுகிறது. * டி.சி.எஸ்., சந்திப்பில் பாறையை நீரோட்டம் பார்த்து தகர்க்காததால், அங்கு மேடாகவும், விஜயநகர் சந்திப்பை நோக்கிய கால்வாய் பள்ளமாகவும் இருப்பதால், வெள்ளம் பின்னோக்கி பாய்கிறது. அந்த வகையில், 1.5 கி.மீ., நீள மூடு கால்வாயில், மழைநீர் பின்னோக்கி பாய்ந்து வீராங்கால் கால்வாய்க்கு செல்கிறது. * பகிங்ஹாம் கால்வாயில் வெள்ளம் கரைபுரண்டோடும்போது, மூடு கால்வாய் தண்ணீர் உள்வாங்குவதில்லை. * துார் வாரும் வகையில், 3.5 கி.மீ., துார மூடு கால்வாயில், 100 அடி இடைவெளியில், 5 முதல் 10 அடி அகலத்தில், ‛சிலாப்' போட்டிருக்க வேண்டும். அதுபோன்று கட்டமைப்பு இல்லாததும் சிக்கலில் உள்ளது. *மழைநீர் பின்னோக்கி பாய்வதை பார்க்க, 2021ம் ஆண்டு, ‛ஜீரோ பாயின்ட்' இடத்தில் கால்வாயை தகர்த்து, 3 அடி அகலம், 10 அடி நீளத்தில், இரும்பு வலை அமைக்கப்பட்டது. அதுவும் தார்ச்சாலை போட்டு மூடப்பட்டுள்ளது.

கைவிடப்பட்ட கால்வாய்!

நெடுஞ்சாலைத்துறையின் சாலை வழியாக செல்லும் மூடு கால்வாய், 2016ம் ஆண்டு பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள கிருஷ்ணா குடிநீர் திட்ட பிரிவு சார்பில் கட்டப்பட்டது. திட்ட பணியை முடித்தபின், பராமரிப்பு பிரிவு வசம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், ஒன்பது ஆண்டுகள் கடந்தும், இதுவரை யார் வசமும் ஒப்படைக்கவில்லை. கிருஷ்ணா குடிநீர் திட்ட பிரிவும் பராமரிக்கவில்லை. உயர் அதிகாரிகள் தலையிட்டு, 3.5 கி.மீ., துாரம் கொண்ட மூடு கால்வாயை, பராமரிப்பு பிரிவு வசம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - வேளச்சேரி பகுதி மக்கள். வீராங்கால் கால்வாய் நீர்வளத்துறை வசம் உள்ளது. பராமரிப்புக்காக மாநகராட்சி வசம் ஒப்படைத்துள்ளோம். அதில் இருந்து துவங்கும், இணைப்பு மூடு கால்வாயை, கிருஷ்ணா குடிநீர் திட்ட பிரிவு கட்டியது. கட்டி முடித்தபின், அவர்கள் நீர்வளத்துறை வசம் ஒப்படைக்கவில்லை. முறையாக ஒப்படைத்திருந்தால், மாநகராட்சியிடம் ஒப்படைத்து பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை நீர்வளத்துறை மேற்கொண்டிருக்கும். உயர் அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும். - நீர்வளத்துறை அதிகாரிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Anantharaman Srinivasan
ஆக 29, 2025 23:45

Contract எடுக்கும் கட்சிகாரன் இன்ஜீனியரிங்கா படிச்சிருக்கான்??. அவன் Contract எடுத்து வேலை செய்தால் தண்ணீதலைகீழாதான் ஓடிவரும்.


vaiko
ஆக 28, 2025 23:26

சமீபத்திய பம்பாய், பெங்களூர் வெள்ள பாதிப்புகளை பார்க்கும்போது சென்னை வெள்ள பாதிப்பு மிகவும் பெரியதல்ல


Rathna
ஆக 28, 2025 20:10

வேளச்சேரி பள்ளிக்கரணை எல்லா ஏரிகளையும் மூடியதால் வந்த வினை. ரெவெர்ஸில் மட்டுமல்ல ஆகாயத்தில் இருந்தே பீச்சி அடித்தாலும் ஆச்சரியப்பட தேவை இல்லை.


Jagan (Proud Sangi )
ஆக 28, 2025 18:37

அந்த ஊரு பெயரே வேளச்சே ஏரி- தண்ணி ஏரிக்கு வராம வேற எங்க போகும் ? ஆறு , ஏரி , கரணை, தாங்கல் , குளம், குட்டை என்று நீர் நிலைகளுக்கு தனி தனி பெயர் வெச்ச சமூகம் இப்போ ஏரிக்கு தண்ணி வருவதை பற்றி ஆச்சர்யப்படுவது - சமூக நீதி கல்வியின் சாதனை


MUTHU
ஆக 28, 2025 07:51

மாநில சுய ஆட்சி ஒன்றுதான் இதற்கு தீர்வு


karthik
ஆக 28, 2025 10:28

மாநில சுய ஆட்சி வாங்கிட்டு போறதுக்கு மொத்தமும்


Chakkaravarthi Sk
ஆக 28, 2025 10:55

எதற்கு? இப்போது எந்த ஆட்சியில் மூடுகால்வாய் அமைக்கப்பட்டது? மாநகராட்சி என்ன டெல்லி மாநகராட்சியிடம் இருக்கிறதா என்ன? சுயாட்சி லட்சணம் தான் தெரிகிறதே. எல்லா நிதிகளையும் சுருட்டிக் கொள்வது தானே? தனிமனிதர்களின் அக்கறையின்மை தண்ணீர் பின்னுக்கு பாய்கிறது. இதற்கும் சுயாட்சிக்கும் என்ன சம்பந்தம்? மாநகராட்சி யாரிடம் இருக்கிறது?


D Natarajan
ஆக 28, 2025 06:36

விடியலின் மாபெரும் சாதனை. MLA. MP கைக்கு சேரவேண்டியது சேர்ந்து விட்டது. வேளச்சேரி மக்களே 2026 ஒன்று தான் தீர்வு. ஒன்று படுங்கள் .


Mani . V
ஆக 28, 2025 05:44

உலகமே வியக்கும் எழவு மாடல் ஆட்சியின் சாதனைப்பு இதெல்லாம். பொறியியலுக்கு நாங்கள்தான் பாடம் எடுக்கணும்.


rama adhavan
ஆக 28, 2025 05:18

இப் பிரட்சினைக்கு வேளச்சேரி எம் எல் ஏ வின் பதில் என்ன?


vee srikanth
ஆக 28, 2025 12:35

நிறைய MLA க்கள் பற்றி யாருக்கும் தெரியாது - அது போல் இவரும்


Raghavan
ஆக 28, 2025 15:02

சென்ற வெள்ளத்தின் பொது மக்கள் வேளச்சேரி MLA வை தொடர்புகொண்டபோது அவர் என்னுடைய வீடு வெள்ளத்தில் மூழ்கியுள்ளது ஆதலால் பிறகு வந்து பார்க்கிறேன் என்று சொன்னர்வர்தான். பிறகு வரவே இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை